உ.பி.,யில் மொத்தம் 10 நகரங்களில் பிரசாரம்செய்யும் மோடி

 பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவரும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நாடெங்கும் முக்கிய நகரங்களில் நடக்கும் பிரசார பொதுக் கூட்டங்களில் பேச உள்ளார்.

குறிப்பாக உத்தர பிரதேசத்தில் அதிக கவனம்செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

உ.பி.,யில் மொத்தம் 10 நகரங்களில் பிரசாரம்செய்ய மோடி முடிவுசெய்துள்ளார். இரண்டு கட்டங்களாக இந்தபிரசாரம் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கி டிசம்பர்வரை அவர் 5 நகரங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். இந்த தேர்தல் பிரசாரத்தை அவர் காசி அல்லது மதுராவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

நரேந்திர மோடியின் இரண்டாவது கட்ட உத்தரபிரதேச பிரசாரம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் ஆக்ராநகரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 10 பொதுக் கூட்டங்களுக்கான தேதிவிவரம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உத்தர பிரதேசத்தில் நரேந்திரமோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...