தே.ஜ., கூட்டணியை நெருங்கும் சந்திரபாபு நாயுடு

 சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில மற்றும் தேசிய அரசியலில் அசைக்க முடியாத நபராக விளங்கிய, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, மீண்டும் தேசிய அரசியல் மீது, தனது செல்வாக்கை உயர்த்த பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், அவர் இணையவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதச் சார்பு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தவறுசெய்து விட்டேன் என கூறி பா.ஜ.க., கூட்டணியிலிருந்து, தெலுங்குதேசம் வெளியேறியது. ஆனால் இதற்க்கு பின் ஆந்திராவில் நடந்த, அனைத்து சட்ட சபை தேர்தல்களிலும், தெலுங்குதேசம் கட்சி, படுதோல்வி அடைந்ததே மிச்சம். கடந்த, 14 ஆண்டுகளாக, அதிகாரத்தை இழந்து, சந்திரபாபுநாயுடு, தவித்துவருகிறார். தொடர்ந்து எதிர்க் கட்சி வரிசையிலேயே இருப்பதால், அவரின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், சோர் வடைந்துள்ளனர். தற்போது, தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, ஒய்எஸ்ஆர்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு, செல்வாக்கு அதிகரித்துள்ளதால், தெலுங்குதேசம் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.

தெலுங்கு தேசத்தைசேர்ந்த, பல முக்கிய தலைவர்கள், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தக்க வைத்துகொள்ள வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கவுள்ள, சட்டசபை மற்றும் லோக்சபாதேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், தெலுங்குதேசம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, வெற்றிகிடைக்கும் என, கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

பாஜ.க.,வுடன் கூட்டணிசேர்ந்தால், சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிப்பதோடு, லோக்சபா தேர்தலிலும் வெற்றிபெற்று, தேசிய அரசியலில், முக்கியபங்கு வகிக்கலாம் என, தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள், சந்திர பாபுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்தமாதம், டில்லியில் நடக்கவுள்ள ஒருவிழாவில், சந்திர பாபுவும், நரேந்திரமோடியும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தெலுங்குதேசத்தை, தே.ஜ., கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. பாஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணையும்வாய்ப்புள்ளதா என, சமீபத்தில், சந்திரபாபுவிடம் கேட்ட போது, நழுவலாக பதில் தந்தார் இதனால், பா.ஜ., கூட்டணியில், அவர், இணைவதற்கான வாய்ப்பு பிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...