தே.ஜ., கூட்டணியை நெருங்கும் சந்திரபாபு நாயுடு

 சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில மற்றும் தேசிய அரசியலில் அசைக்க முடியாத நபராக விளங்கிய, தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, மீண்டும் தேசிய அரசியல் மீது, தனது செல்வாக்கை உயர்த்த பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், அவர் இணையவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதச் சார்பு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தவறுசெய்து விட்டேன் என கூறி பா.ஜ.க., கூட்டணியிலிருந்து, தெலுங்குதேசம் வெளியேறியது. ஆனால் இதற்க்கு பின் ஆந்திராவில் நடந்த, அனைத்து சட்ட சபை தேர்தல்களிலும், தெலுங்குதேசம் கட்சி, படுதோல்வி அடைந்ததே மிச்சம். கடந்த, 14 ஆண்டுகளாக, அதிகாரத்தை இழந்து, சந்திரபாபுநாயுடு, தவித்துவருகிறார். தொடர்ந்து எதிர்க் கட்சி வரிசையிலேயே இருப்பதால், அவரின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், சோர் வடைந்துள்ளனர். தற்போது, தெலுங்கானா ராஷ்டிரியசமிதி, ஒய்எஸ்ஆர்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு, செல்வாக்கு அதிகரித்துள்ளதால், தெலுங்குதேசம் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.

தெலுங்கு தேசத்தைசேர்ந்த, பல முக்கிய தலைவர்கள், மாற்று கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தக்க வைத்துகொள்ள வேண்டுமானால், அடுத்தாண்டு நடக்கவுள்ள, சட்டசபை மற்றும் லோக்சபாதேர்தலில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், தெலுங்குதேசம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, வெற்றிகிடைக்கும் என, கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

பாஜ.க.,வுடன் கூட்டணிசேர்ந்தால், சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியை பிடிப்பதோடு, லோக்சபா தேர்தலிலும் வெற்றிபெற்று, தேசிய அரசியலில், முக்கியபங்கு வகிக்கலாம் என, தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகள், சந்திர பாபுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்தமாதம், டில்லியில் நடக்கவுள்ள ஒருவிழாவில், சந்திர பாபுவும், நரேந்திரமோடியும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, தெலுங்குதேசத்தை, தே.ஜ., கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. பாஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இணையும்வாய்ப்புள்ளதா என, சமீபத்தில், சந்திரபாபுவிடம் கேட்ட போது, நழுவலாக பதில் தந்தார் இதனால், பா.ஜ., கூட்டணியில், அவர், இணைவதற்கான வாய்ப்பு பிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...