ஜனாதிபதி பிரணாப் தனது பீகார்விஜயத்தை வேறு தினத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்

ஜனாதிபதி பிரணாப் தனது பீகார்விஜயத்தை வேறு தினத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் நரேந்திரமோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் நாளில் பீகார்வருவதை தவிர்க்கவேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி மாநிலம் மாநிலமாக சென்று தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார். ஆந்திரா, ம.பி.,, தமிழ்நாடு, டெல்லியை தொடர்ந்து வரும் 27ம் தேதி பீகார்மாநிலம் பாட்னாவில் பிரமாண்ட பொதுகூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 6 மாதங்களாக மாநில பாஜக தீவிரமாக பணியாற்றிவருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம், மோடி பொதுகூட்டத்தை காந்தி மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்துள்ளது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மோடிகூட்டம் நடைபெறும் அதேநாளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மாநிலத்துக்கு வருமாறு அழைப்பும்விடுத்துள்ளது. இதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். வரும் 27ம் தேதி பாட்னாவில் மோடி பொதுக்கூட்டம் நடைபெறும் விஷயத்தை பீகார்முதல்வர் நிதிஷ் குமார், ஜனாதிபதி அலுவலகத்துக்கு திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜனாதிபதி வருகையையொட்டி பாட்னாமுழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். மேலும் விமானநிலையத்திலும் வேறு விமானங்கள் தரையிறங்க அனுமதிமறுக்கப்படும். இதனால் மோடியின் விமானம் பாட்னாவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும். பொதுகூட்டத்துக்கு வெளி மாவட்டங்களிலிருந்து மக்கள்வருவது தடுக்கப்படும். இப்படி பலபிரச்னைகள் ஏற்படும் என்பதால் ஜனாதிபதி பிரணாப் தனது பீகார்விஜயத்தை வேறு தினத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என பாஜ சார்பில் ஜனாதிபதி பிரணாப்புக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...