நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் அத்வானியும், முதல்வர் நரேந்திரமோடியும் இணைந்து பங்கேற்றனர். அவற்றில் உள்கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனத்தொடக்க விழாவும் ஒன்றாகும். அந்த விழாவில் அத்வானி பேசியதாவது;
மத்தியில் அடுத்த அரசை அமைக்கும்வாய்ப்பு எங்களுக்கு (பாஜக) கிடைத்தால், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பதில் மகிழ்ச்சிய அடைவோம்.
நான் இங்கு வந்த போது, இக்கல்வி நிறுவன அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நாட்டில் உள்கட்டமைப்பை ஒரு பாடமாகப்போதிக்கும் கல்விநிறுவனம் ஏதாவது இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என பதில் தந்தார் .
நரேந்திரமோடி எப்போதுமே நம்மால் புதுமையாக ஏதாவது செய்யமுடியுமா, புது முன்முயற்சியை எடுக்கமுடியுமா என்று சிந்திப்பார். நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நம் நாட்டில் மட்டுமின்றி உலகம்முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.