மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல் ஆதாரங்களை ஒப்படைத்தது பாஜக

மகாராஷ்டிர நீர்ப்பாசன ஊழல் ஆதாரங்களை ஒப்படைத்தது பாஜக  மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ்கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களில் பலகோடி ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்குறித்து விசாரிக்கும் மாதவ்சித்தாலே குழுவிடம், அம்மாநில பாஜக தலைவர்கள் ஆதாரங்களை ஒப்படைத்தனர்.

14 ஆயிரம்பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை மாட்டுவண்டியில் ஏற்றி வந்த அந்தமாநில பாஜக தலைவர் தேவேந்திரா பட் நாவிஸ், மாநில சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவர் வினோத்தாவ்தே ஆகியோர் ஒளரங்காபாத்தில் திங்கள் கிழமை மாதவ் சித்தாலேவை நேரில் சந்தித்து அவற்றை ஒப்படைத்தனர்.

இதையடுத்து, அவர்கள் செய்தியாளர்களிடம்கூறியது: மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் இணைந்தே இந்தச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணைமுதல்வர் அஜீத்பவாருக்கும் தொடர்புண்டு.

உண்மையை வெளிக் கொணர வேண்டும்: இந்தமுறைகேட்டை நிரூபிக்க நாங்கள் அளித்துள்ள ஆதாரங்களே போதுமானவை. இருப்பினும் கூடுதல் ஆதாரங்களை திரட்டிவருகிறோம். அந்த ஆதாரங்களை ஒப்படைக்க விசாரணை குழுவிடம் 15 நாள்கள் அவகாசம் கோரியுள்ளோம் என்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...