நரேந்திரமோடி , சோனியாகாந்தி செல்லயிருந்த பாதையில் கண்ணிவெடிகள்

 சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பி.ஜே.பி பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆகியோர் செல்லயிருந்த பாதையில் கண்ணிவெடிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் செல்ல இருந்த சிலமணி நேரத்திற்கு முன்னதாக 50 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டுகட்டமாக சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல்பிரச்சாரம் செய்வதற்காக தலைவர்கள் சத்தீஸ்கர் நோக்கி செல்லதுவங்கி உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிஜேபி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் பஸ்தார் செல்வதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னதாக மத்திய காவல்படையினர் நெடுஞ்சாலைகளில் அதிரடிசோதனை நடத்தினார்கள்.

சுக்மா மாவட்டத்தில் தோர்ண பாலுக்கும் ஜகர்குண்டாவுக்கும் இடையே நெடுஞ்சாலையில் கண்ணிவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதை வெடிகுண்டுநிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

இரும்பு பெட்டிக்குள் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றும் 25 கிலோ எடை கொண்ட இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை செயலிழக்கப்பட்டன. இதன்மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்புபடையினர் தெரிவித்தனர்.

இதே இடத்தில்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட்டு தீவிரவாதிகள் நடத்திய கொடூரதாக்குதலில் 76 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...