பா.ஜ.க ஆட்சிஅமைக்க முன்வரவேண்டும்

 டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைபற்றிய பா.ஜ.க ஆட்சிஅமைக்க முன்வரவேண்டும் என ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம்ஆத்மி கட்சியின் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

ஆம்ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிக இடங்களை மக்கள் அளித்துள்ள நிலையில் பொறுப்புகளை தட்டி கழிக்காமல் பாஜக ஆட்சியமைக்க முன்வரவேண்டும் என்று கூறினார்.

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதியில் 31 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களில் வென்று 2வது இடத்தை பெற்றுள்ளது.

காங்கிரசு 8 இடங்கள்மட்டுமே கிடைத்துள்ளன. ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம், மற்றும் ஒருசுயேட்சை ஆகியோர் ஒரு இடங்களில் வென்றுள்ளனர். இதனால் அதிக இடங்களை கைபற்றியுள்ள பாஜக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று கூறப்படுகிறது.

இதனை பாஜக நிராகரிக்கும்பட்சத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர் அழைப்புவிடுப்பர் எனத்தெரிகிறது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்கா விட்டால் சட்டப் பேரவையை சஸ்பெண்ட்செய்து ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிப்பார் என்றும் டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...