வரிவிதிப்பு சீர்திருத்தங்கள் கறுப்பு பணத்தை ஒழிக்கும்

 வருமான வரி விதிப்பதை ரத்து செய்து விட்டு வேறுவழிகளில் அரசு வருவாய் ஈட்டுவது சாத்தியமானது தான் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தால் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வது என பாஜக தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள வரி விதிப்பு முறையிலும் சிலமாற்றங்களை செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இது பற்றி ஆய்வுசெய்வதற்காக முன்னாள் தலைவர் நிதின்கட்காரி தலைமையில் 'விஷன் 2025 கமிட்டி' என்ற பெயரில் ஒருகுழுவை அமைத்து இருக்கிறது.

புனேயைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு வரி சீர்திருத்தங்கள் தொடர்பான சில யோசனைகளை நிதின்கட்காரி குழுவிடம் தெரிவித்துள்ளது. நேர்முக மற்றும் மறைமுக வரிகள் அனைத்தையும் ரத்துசெய்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளும் வங்கிகணக்கு நடவடிக்கைகள் மீது குறைந்த அளவு வரிவிதிக்கலாம் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில், வரி சீர்திருத்தங்கள் குறித்து தொழில் மற்றும் வர்த்தகதுறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சிலர் தங்கள் யோசனைகளை தெரிவித்து உள்ளனர். வருமானவரி விதிப்பதை ரத்துசெய்துவிட்டு பிற வழிகளில் அரசாங்கம் வருவாய் ஈட்டுவது சாத்தியமானது மட்டுமின்றி, விரும்பத்தக்கதும்கூட என்று சில நிபுணர்கள் கூறி இருக்கிறார்கள் நம் நாட்டுக்கு நிலையான, சமமான, வரி செலுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வரிவிதிப்பு முறை தேவைப்படுவதாக இந்தியவர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் சித்தார்த் பிர்லா கூறி உள்ளார். வரிவருவாயை அதிகரிக்கும் நோக்கில், வரிவிதிப்பு எல்லையையும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் வரிசெலுத்துவதில் ஒளிவு மறைவற்ற தன்மையை மேம்படுத்த உதவும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

மற்றொரு தொழில் அமைப்பின் தலைவரான சரத்ஜைபூரியா கூறுகையில்; தனிநபர் வருமானவரி விகிதத்தை குறைப்பதோ அல்லது ரத்துசெய்வதோ சாத்தியம் தான் என்றும், அப்படி செய்து விட்டு மாற்று வழிகளில் வருவாயை பெருக்குவது பற்றி ஆய்வுசெய்யலாம் என்றும் தெரிவித்தார். பிறவழிகளில் வருவாயை திரட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், ஆனால் அந்தவழிகள் மூலம் வருவாய் ஈட்டுவது பற்றி இன்னும் முயற்சி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் கறுப்புபணத்தை ஒழிக்க முடியும் என்றும் சில நிதிநிபுணர்கள் கூறி இருக்கிறார்கள்.

தனி நபர்கள், நிறுவனங்களுக்கான வரிச்சுமையை குறைப்பதால் ஊழலை குறைப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம் என்று கிரிஷ்வன்வாரி என்ற நிபுணர் கூறி உள்ளார். அப்படி வரிச் சுமை குறைக்கப்பட்டால் வரி ஏய்ப்புசெய்வது, வருமான வரிகணக்கு தாக்கலில் முறைகேடு செய்வது, சட்டவிரோத பணபரிவர்த்தனை போன்றவற்றில் வரி செலுத்துவோர் ஈடுபடமாட்டார்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார்.என்றாலும் வரி விதிப்பு முறையில் பெரியளவில் மாற்றங்களை செய்யும்முன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் விரிவாக ஆய்வுசெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...