ராகுல்காந்தியின் பொருளாதார திறமை பற்றி சிதம்பரம் கருத்து கூறுவாரா

 காங்கிரஸ் கட்சியில் பிரதமராக்க முயலும் ராகுல்காந்தியின் பொருளாதார திறமை பற்றி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துகூறுவாரா என்று மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவரும், பாஜக மூத்தத் தலைவருமான அருண்ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அருண்ஜெட்லி விடுத்துள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோர் பொருளாதார வல்லுநர்கள் இல்லை யென்றாலும், சிறந்த அரசியல் தலைவர்களாக இருந்ததுடன், பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தலைமைப்பண்பும், முடிவெடுக்கும் திறனும் கொண்டிருந்தனர்.

அவர்களால் பொருளாதாரப் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியா விட்டால், தங்களது எண்ணத்தை உறுதிசெய்து விமர்சகர்களை ஒதுக்கி தள்ளுவார்கள். இந்த தன்மையால் தான் அவர்கள் இருவரும் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

நரேந்திரமோடி தன்னை பொருளாதார வல்லுநர் என்று கூறிக்கொள்வதில்லை. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் குஜராத்தை நிர்வகிப்பதில் தனது திறமையையும் முடிவெடுக்கும் தன்மையையும் நிலை நாட்டியுள்ளார். அதனால் தான் இன்று குஜராத், இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக உள்ளது.

அவருக்கு சிதம்பரம் போன்றவர் களின் சான்றிதழ் தேவையில்லை. சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் வெளியேறி மாற்றம் ஏற்பட்டபின்னரே இந்தியாவில் முதலீடுகள் பெருகும் என்பது தான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பிரதமராக்க முயலும் ராகுல்காந்தியின் பொருளாதார அறிவு மற்றும் திறமைபற்றி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்துகூறுவாரா?” என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...