எம்.பி, எம்எல்ஏ.க்களுக்கு வழக்குகளை தாமதப் படுத்த உரிமை இல்லை

 ஊழல் மற்றும் இதர கடுமையான குற்றவழக்குகளை சந்தித்துவரும் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு அதன் விசாரணையை தாமதப் படுத்த உரிமை இல்லை என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை வரவேற்று செவ்வாய் கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது

குற்றம் பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் விசாரணையை நீதிமன்றங்கள் முடிக்கவேண்டும் என்று இது குறித்த ஒருவழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதை வரவேற்றுள்ள அருண் ஜேட்லி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: வழக்கு விசாரணையை தாமதப் படுத்தி இழுத்தடிக்க எம்பி மற்றும் எம்எல்ஏ.,க்களுக்கு உரிமை இல்லை.

இந்திய அரசியலில் கிரிமினல் மயம் என்பது, மிகமோசமான பிரச்சனையாக தொடர்ந்துவருகிறது. கிரிமினல் குற்றங்களுக்காக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பலரை அரசியல் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துகின்றன.

சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்க தகுதி இழக்கிறார்களே தவிர, குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட அரசியல் வாதிகளுக்கு எந்த தடைகளும் இல்லை. இது மக்கள்மனதில் அரசியலின் தன்மையைப் பற்றிய மோசமான எண்ணத்தை உருவாக்குகிறது. சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவிர, ஒருவர் குற்றமற்றவராக கருதப்படுகிறார். இது நீதியின் தேவைக்கும், மக்கள் எண்ணத்துக்கும் ஒரு இடைவெளியை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...