ஊழல் மற்றும் இதர கடுமையான குற்றவழக்குகளை சந்தித்துவரும் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு அதன் விசாரணையை தாமதப் படுத்த உரிமை இல்லை என்று அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை வரவேற்று செவ்வாய் கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது
குற்றம் பதிவுசெய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் விசாரணையை நீதிமன்றங்கள் முடிக்கவேண்டும் என்று இது குறித்த ஒருவழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதை வரவேற்றுள்ள அருண் ஜேட்லி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: வழக்கு விசாரணையை தாமதப் படுத்தி இழுத்தடிக்க எம்பி மற்றும் எம்எல்ஏ.,க்களுக்கு உரிமை இல்லை.
இந்திய அரசியலில் கிரிமினல் மயம் என்பது, மிகமோசமான பிரச்சனையாக தொடர்ந்துவருகிறது. கிரிமினல் குற்றங்களுக்காக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள பலரை அரசியல் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துகின்றன.
சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் தேர்தலில் நிற்க தகுதி இழக்கிறார்களே தவிர, குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட அரசியல் வாதிகளுக்கு எந்த தடைகளும் இல்லை. இது மக்கள்மனதில் அரசியலின் தன்மையைப் பற்றிய மோசமான எண்ணத்தை உருவாக்குகிறது. சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் தவிர, ஒருவர் குற்றமற்றவராக கருதப்படுகிறார். இது நீதியின் தேவைக்கும், மக்கள் எண்ணத்துக்கும் ஒரு இடைவெளியை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.