நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மும்முனை போட்டிதான்

 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் மும்முனை போட்டி தான் இருக்கும் என பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது; தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் உருவாகியுள்ள தேசியஜனநாயக கூட்டணி இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தொகுதிக்கு ஒன்றுவீதம் 39 ஒருங்கிணைப்பு குழு அமைக்கவுள்ளோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்தும், தனித் தனியாகவும் பிரச்சாரம் மேற் கொள்ளப்படும். தமிழகத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம்செய்ய மூத்த தலைவர் எல்கே.அத்வானி, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரவுள்ளனர். அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடம், தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் நிச்சயம் மும்முனை போட்டி தான் இருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெறும். வாக்கு வித்தியாசத்தை பற்றிக் கவலையில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசை வீழ்த்துவது தான் எங்கள் முக்கியநோக்கம். இந்த தேர்தலை பொருத்த வரை தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய் விடும். புதுச்சேரி கூட்டணிக்கு நான் பொறுப்பில்லை. அக்கூட்டணி குறித்து புதுச்சேரியும் டெல்லியும் தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மீனவர்கள் பாதுகாப்பு, இலங்கைத் தமிழர் நலன், வளர்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவோம். மீனவர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மீது பழிபோட்டு மத்திய அரசு தப்பிக்கப்பார்க்கிறது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...