பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டுதாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்

 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டுதாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உபி உளவுத்துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலின் போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, ஆகியோரை கடத்திச்செல்ல இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.

அதைத்தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதி களை டெல்லி போலீஸார் அடுத்தடுத்து கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தேசிய தலைவர்களை தாக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக டெல்லி, உ.பி., பிஹார் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச உளவுப்பிரிவு போலீஸார் புதிதாக ஓர் அதிர்ச்சி தகவலை இப்போது வெளியிட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிகதொகுதிகளை கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடும் என்பதால் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அந்தமாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் பாஜக பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இவர்களில் தேசியத் தலைவர்களான நரேந்திரமோடி (வாரணாசி), ராஜ்நாத்சிங் (லக்னோ), ராகுல் காந்தி (அமேதி), சோனியா காந்தி (ரே பரேலி) என்று உத்தரப் பிரதேசத்தில் நேரடியாக களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் தங்களது தொகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் ரிமோட்கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானங்கள், ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி வெடி குண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில உளவுப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்ட போலீஸாரும் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.

முக்கிய நகரங்களில் பொம்மை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விற்பனைசெய்யும் கடைகளில் போலீஸார் தீவிரசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சிலநாட்களில் யார் யாரெல்லாம் ரிமோட்கன்ட்ரோல் பொம்மைகளை வாங்கிச் சென்றார்கள் என்பது குறித்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பொம்மை விமானங்கள்தவிர ‘ஏர் பலூன்கள்’ மூலமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுப்பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...