பாஜவை ஏமாற்றிய நிதீஷ்குமார் வருங்காலத்தில் வருத்தப்படுவார்

 தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17ஆண்டு காலம் இருந்துவிட்டு வெளியேறிய பிகார் முதல்வர் நிதீஷ்குமார் வருங்காலத்தில் வருத்தப்படுவார். கூட்டணி கட்சிகளுக்கு பாஜக எப்போதும் மரியாதை அளித்துவருகிறது. ஆனால், நிதீஷ்குமார் பாஜவை ஏமாற்றியது மட்டுமின்றி குற்றம்சாட்டியும் வருகிறார் என்று அத்வானி குற்றம் சாட்டியுள்ளார்.

பிகார் மாநிலத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற பா.ஜ.க பிரசார கூட்டங்களில் அத்வானி பேசியதாவது: ஊழல்கள் நடைபெறுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் அனுமதித்திருக்க கூடாது. அதற்கு துணைபோன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.

காங்கிரஸ் தலைமையின் மோசடிக்கு மன்மோகன்சிங் துணைபோனது, அவரது பலவீனத்தை காண்பிக்கிறது. பிரதமர்பதவிக்கு உண்டான பெருமையை அவர் சீர்குலைத்து விட்டார்.

ஐ.மு.,கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, ஊழல்கள், முறைகேடுகள் ஆகியவற்றால் காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வராது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், நதிநீர் இணைப்புத் திட்டம், நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை கொண்டுவந்தார். ஆனால், ஐமு.,கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமர் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம் சரியான மேலாண்மை இல்லாத காரணத்தால் தோல்வி அடைந்துவிட்டது.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். நிதீஷ் வருத்தப்படுவார்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17ஆண்டு காலம் இருந்துவிட்டு வெளியேறிய பிகார் முதல்வர் நிதீஷ்குமார் வருங்காலத்தில் வருத்தப்படுவார். கூட்டணி கட்சிகளுக்கு பாஜக எப்போதும் மரியாதை அளித்துவருகிறது. ஆனால், நிதீஷ்குமார் பாஜவை ஏமாற்றியது மட்டுமின்றி குற்றம்சாட்டியும் வருகிறார் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...