தனது சொந்த தொகுதியை கையாளமுடியாத ராகுல் எப்படி நாட்டை வழிநடத்துவார்

 தனது தொகுதியான அமேதியையே கையாளமுடியாத ராகுல் காந்தியால் நாட்டை வழிநடத்த முடியுமா என நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஷ்கார் மாநிலம், சர்குஜாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது.
”அமேதி மக்களிடம் சோனியா காந்தி, தனது மகனைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் (ராகுல்காந்தி) நாட்டை கவனித்துக்கொள்வார் என நமக்கு சொல்லப்படுகிறது. இதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா, சொல்லுங்கள். தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு தொகுதி மக்களை கெஞ்சிக்கேட்கிறார்… ராகுலால் தனது அமேதியை கையாள முடியாதபோது, அவரால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

‘மக்களின் கனவுகளை விற்றுக்கொண்டிருக்கிறார், நாட்டின் நிலையை ஒரே நாளில் மாற்றிவிடும் மந்திரக் கோல் வைத்திருக்கிறார்’ என காங்கிரஸ் தன்னை விமர்சித்து வருகிற நிலையில், குறுகியகாலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட்வதேரா மட்டும் பெரும் பணக்காரராகி விட்டது எப்படி என்று மோடி கேள்வி எழுப்பினார்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில், ”பத்தாம் வகுப்பு பாஸ்செய்த அந்த இளைஞர் பாக்கெட்டில் ஒருலட்சம் ரூபாய் வைத்திருந்தார். ஆனால் மூன்றே வருடங்களில் பாக்கெட்டில் ரூ.300 கோடி வந்துவிட்டதே? இது தாய்மகன் மாடல். நீங்கள் 2ஜி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது ஜிஜாஜி (மச்சான்) பற்றி கேள்விப்படுகிறீர்கள். இவர்கள் கைகளிலா நாம் நாட்டை விடமுடியும்?”

பிரதமர் 10 ஆண்டுகளில் 1,100 முறை பேசி இருக்கிறார் என்பதை தெரியப்படுத்துவதற்காக முதன் முதலாக பிரதமர் அலுவலகம் பத்திரிகை யாளர்கள் சந்திப்பை நடத்தி இருக்கிறது. பிரதமர் 10 வருடங்களில் 1,100 முறை பேசியது தான் அவரது சாதனை”

”அரசாங்கத்தை நடத்தியது மன்மோகன்சிங் அல்ல. தாயும், மகனும் தான் அரசாங்கத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். அரசாங்கத்தில் நடந்த எல்லாதவறான செயல்களுக்கும் மன்மோகன் சிங் விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் உண்மையான அதிகாரம் சோனியா, ராகுல் வசம்தான் இருந்திருக்கிறது என்பதை பிரதமர் அலுவலக முன்னாள் அதிகாரியின் புத்தகம் இப்போது படம் பிடித்துக்காட்டி இருக்கிறது” என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.