கடவுளால் கூட பலாத்காங்களை தடுத்து நிறுத்த முடியாது

 உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் அஜிஸ் குரேஷி, கடவுளால் கூட பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தமுடியாது என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

சமீபத்தில் லக்னோவின் மோகன்லால் கங் பகுதியில் 35 வயது பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியபிறகு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“பலாத்காரம் போன்ற குற்றங்களுக்காக அரசாங்கத்தை ஊடகங்கள் கண்டிக்கக்கூடாது. உத்தர பிரதேசத்தில் இத்தகைய குற்றங்களை ஆண்டவனால் கூட தடுத்து நிறுத்த முடியாது. உலகம் முழுவதிலும் இருந்து போலீசாரை கொண்டு வந்து உத்தர பிரதேசத்தில் குவித்தாலும் அவர்களால் பலாத்கார சம்பவங்களை தடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு பாஜக., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர் நேற்றுடன் (21.07.20#14) பதவி விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் முதல்வர் அகிலேஷ் தந்தையான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், பலாத்காரம் என்பது உபி., மக்கள் தொகையை பார்க்கும்போது குற்றச்செயல்கள் அளவு குறைவுதான் என்றார். இவருக்கு ஆதரவாக இவரதுகட்சி எம்.பி,. ஒருவர் கூறுகையில், பலாத்காரம் வறுமை காரணமாகவும், மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாகவும் நடக்கிறது என்றார். இதுபோல் மற்றொரு கட்சி நிர்வாகியான ஒருவர், பலாத்காரம் முன் கூட்டியே தடுத்துவிட முடியாது. இதுகுறித்து யாருக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைப்பதில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...