பட்ஜெட் கூட்டத் தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது.

 தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது. நீதித்துறை நியமன ஆணையமசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாதில் நிருபர்களிடம் ஞாயிற்றுக் கிழமை அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்துக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. மூன்று நாள்களுக்குள் எம்பி.க்கள் தொகுதிக்கு சென்று விட்டு டெல்லி திரும்பமுடியாது என்பதால் விடுமுறை நாள்கள் 4 ஆக அதிகரிக்கப்பட்டது.

தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரின் அலுவல் நாள்கள் குறைக்கப்படாது. நீதித்துறை நியமன ஆணையமசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் விவகாரத்தில் அட்டர்னிஜெனரல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அது குறித்து மக்களவை சபாநாயகர் பரிசீலித்து முடிவெடுப்பார். இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்ப தாக காங்கிரஸ் குற்றம் சாட்டுவது தவறானது.

ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த போது மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் பொறுப்பு யாருக்கும் அளிக்கப்படவில்லை.

மக்களவைத் தலைவர் விவகாரத்தில் 1977முதல் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ்கூறுகிறது. அப்படியென்றால் 1977க்கு பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது மக்களவையில் 31 உறுப்பினர்களுடன் மிகப்பெரிய கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்துக்கு ஏன் எதிர்க் கட்சி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...