யு.பி.எஸ்.சி விவகாரத்தில் மோடி உரிய தீர்வு காண்பார்

 யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வுகாண்பார் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதியளித்துள்ளார் .

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பணித்தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதும் நடைமுறையில் மாற்றம்வேண்டும் என்று இந்திய அளவில் யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக பயிற்சிமாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்நிலை தேர்வுக்கான வினாத் தாள்களும் மாநில மொழியில் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கையையும் மாணவர்கள் வைத்துள்ளனர். இந்தப்பிரச்சினை கடந்த சில நாட்களாக, நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கு பதில் தரும் விதத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது , “பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தில் தீர்வுகாண ஆராய்ந்துவருகிறார். விரைவில் இந்த பிரச்சினைக்கு முடிவு எட்டப்படும்.

இந்திமொழி மீது முக்கியத்துவம் அளிப்பது என்று இதனை பார்ப்பதை விட, மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதுதான் இதில் சிந்திக்கவேண்டிய விஷயம். இந்த விவகாரத்தில் நடுநிலையான முடிவுதேவை என்பதில் பிரதமர் தெளிவாக உள்ளார். இதற்கு விரைவில் தீர்வுகிடைக்கும்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...