நாகர்கோவில் வானொலி நிலையம் மீண்டும் நாள் முழுதும் செயல்படும்

 சுதந்திரத் திருநாளில் இருந்து, நாகர்கோவில் வானொலி நிலையம் காலை 5..55 முதல் இரவு 11 மணிவரை நாள் முழுதும்செயல்படும் என நாகர்கோவில் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது; 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் அகில இந்திய வானொலி நிலையம் செயல்படத்துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் திருவனந்த புரத்தின் தென்பகுதி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பகுதி உள்ளிட்ட 20 இலட்சம் மக்களை உள்ளடக்கிய பகுதிக்கு அகில இந்திய வானொலி நிலையம் தனது சேவையை செய்துவருகிறது.

இதன் ஒலிபரப்பு மாலை 5.30 முதல் இரவு 9.00 மணி வரையில் செயல்பட்டுவந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 2000-ம் ஆண்டில் மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் அவர் முயற்சியால் இந்த வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு காலை 5.55 முதல் 9.30 வரையிலும் பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் விரிவுபடுத்தப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிப்படி கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்து வலியுறுத்தியதின் பேரில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் காலை 5.55 மணி முதல் இரவு 11.00 மணி வரை இடைவெளியின்றி செயல்படும் என உறுதியளித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...