நாகர்கோவில் வானொலி நிலையம் மீண்டும் நாள் முழுதும் செயல்படும்

 சுதந்திரத் திருநாளில் இருந்து, நாகர்கோவில் வானொலி நிலையம் காலை 5..55 முதல் இரவு 11 மணிவரை நாள் முழுதும்செயல்படும் என நாகர்கோவில் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனிடம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது; 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் அகில இந்திய வானொலி நிலையம் செயல்படத்துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் திருவனந்த புரத்தின் தென்பகுதி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பகுதி உள்ளிட்ட 20 இலட்சம் மக்களை உள்ளடக்கிய பகுதிக்கு அகில இந்திய வானொலி நிலையம் தனது சேவையை செய்துவருகிறது.

இதன் ஒலிபரப்பு மாலை 5.30 முதல் இரவு 9.00 மணி வரையில் செயல்பட்டுவந்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 2000-ம் ஆண்டில் மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் அவர் முயற்சியால் இந்த வானொலி நிலையத்தில் ஒலிபரப்பு காலை 5.55 முதல் 9.30 வரையிலும் பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலும் விரிவுபடுத்தப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிப்படி கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்து வலியுறுத்தியதின் பேரில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நாகர்கோவில் அகில இந்திய வானொலி நிலையம் காலை 5.55 மணி முதல் இரவு 11.00 மணி வரை இடைவெளியின்றி செயல்படும் என உறுதியளித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...