வட்டார போக்குவரத்து அலுவலகங்களை மூட மத்திய அரசு பரிசீலனை

 வட்டார போக்குவரத்து அலுவலகங்களை (ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ) மூட மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்குபதிலாக மாற்று அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது, அடுத்த சிலமாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடு வதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரதப் பழசாகிப்போன சில விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மாற்றுவதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு ஈடுபாடு காட்டிவருகிறது. சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, திட்டக் கமிஷனுக்கு மாற்றாக வேறு ஒரு அமைப்பை உருவாக்க அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். இதன் தொடர்ச்சியாக, மண்டல போக்குவரத்து அலுவலகங்களையும் மூட மத்திய அரசு முயற்சிசெய்து வருவதாக அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகங்களின் பணிகளை மேற்கொள்ள தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்வதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்படும்,’ என்றார்.

மேலும், சாலைவிதிகளை மீறுவோர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, சாலை விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு வீடுதேடி நோட்டீஸ் வரும். நோட்டீஸ் கிடைக்க பெற்றவர்கள் கோர்ட்டிற்கு சென்று, அபராதத்தை செலுத்தவேண்டும். அவ்வாறு செல்லாதவர்களிடம் இருந்து மூன்றுமடங்கு அபராத தொகை வசூலிக்கப்படும். இந்தவகையில், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நகர போக்குவரத்து செயல்பாடுகளை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...