சுப்பிரமணியசாமி கருத்துக்கும் பாஜக.,வுக்கும் எந்ததொடர்பும் இல்லை

 தமிழக மீனவர்கள் குறித்து சுப்பிரமணியசாமி தெரிவித்த கருத்துக்கும், பாஜக.,வுக்கும் எந்ததொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-இலங்கையிடம், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடியுங்கள் என்று தான் சொல்லியதாக சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறாரே? இதை பாஜக கருத்தாக ஏற்றுக்கொள்ளலாமா?

பதில்:-சுப்பிரமணிய சாமியின் இந்தகருத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் எந்ததொடர்பும் இல்லை. மீனவர்கள் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு தமிழக பாரதீய ஜனதா பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்பட அனைத்து தலைவர்களும் இதற்காக பெரும் முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:-பா.ஜனதாவின் கருத்து இல்லை என்கிறீர்கள். அப்போது இதுகுறித்து மேலிடத்தில் புகார் செய்துள்ளீர்களா?

பதில்:-இதுகுறித்து கட்சியின் அகில இந்திய தலைமையிடம் தெரியப்படுத்தி யிருக்கிறோம். அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்தநேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதை நீங்கள் அரசியல் ஆக்கவேண்டாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...