அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்

 நெல்லை பாஜ வேட்பாளரை மிரட்டி வேட்பு மனுவை கையெழுத்து வாங்கி வாபஸ் பெற செய்துள்ளனர் என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜ தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிட தயங்கிய நிலையில் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பாஜ களத்தில் நிற்கின்றது. ஆனால், பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் போட்டியிட கூடாது என்று மிரட்டப் பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தால் மனுக் களை வாங்க மறுக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி பாஜ மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் கடந்த 3 நாட்களாக மிரட்டப்பட்டு வந்தார். இது தொடர்பாக கட்சிக்கும் தகவல் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். மேலும், அவரை அதிமுகவில் சேர்த்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து தற்போது வலுத்து வரும் நிலையில் பெண் வேட்பாளர் மிரட்டப்படுகிறார், என்றால் தேர்தலில் பெண்கள் எப்படி நிற்க முடியும்.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற மோசமான நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பாஜவினரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீஸ் போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுவது கண்டிக்கத்தக்கது. இது அரசி யல் கட்சிகளை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துவதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் நாங் கள் தேர்தல் களத்தில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறோம். இதற்கு பயந்து வேட்பாளர்களை மிரட்டுவது, தாக்குவது, மனுக் களை வாபஸ் பெற வைப்பது என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் வெற்றி பெற கூடாது, போட்டியிடாமலே வெற்றி பெற வேண்டும் என்றே இது போன்ற நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில், தேர்த லில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கக்கூடிய கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாஜ வேட்பாளர்களை மிரட்டினாலும் அதனை அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையம் தேர்தல் நியாயமாகவும், நடுநிலையுடனும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் பிரசாரம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...