அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்

 நெல்லை பாஜ வேட்பாளரை மிரட்டி வேட்பு மனுவை கையெழுத்து வாங்கி வாபஸ் பெற செய்துள்ளனர் என்று பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழக பாஜ தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் போட்டியிட தயங்கிய நிலையில் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பாஜ களத்தில் நிற்கின்றது. ஆனால், பல இடங்களில் பாஜ வேட்பாளர்கள் போட்டியிட கூடாது என்று மிரட்டப் பட்டும், தாக்குதலுக்கு உள்ளாகியும் வருகின்றனர்.

இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தால் மனுக் களை வாங்க மறுக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி பாஜ மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் கடந்த 3 நாட்களாக மிரட்டப்பட்டு வந்தார். இது தொடர்பாக கட்சிக்கும் தகவல் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். மேலும், அவரை அதிமுகவில் சேர்த்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து தற்போது வலுத்து வரும் நிலையில் பெண் வேட்பாளர் மிரட்டப்படுகிறார், என்றால் தேர்தலில் பெண்கள் எப்படி நிற்க முடியும்.

எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற மோசமான நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பாஜவினரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீஸ் போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது எந்த விதத்தில் நியாயம். அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுவது கண்டிக்கத்தக்கது. இது அரசி யல் கட்சிகளை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துவதாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் நாங் கள் தேர்தல் களத்தில் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறோம். இதற்கு பயந்து வேட்பாளர்களை மிரட்டுவது, தாக்குவது, மனுக் களை வாபஸ் பெற வைப்பது என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் வெற்றி பெற கூடாது, போட்டியிடாமலே வெற்றி பெற வேண்டும் என்றே இது போன்ற நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில், தேர்த லில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கக்கூடிய கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாஜ வேட்பாளர்களை மிரட்டினாலும் அதனை அஞ்சாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தேர்தல் ஆணையம் தேர்தல் நியாயமாகவும், நடுநிலையுடனும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறையில் பிரசாரம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...