ஒருகட்சியின் வேட்பாளரை வேறுகட்சியில் சேர்ப்பது ஜனநாயகமா

 பா.ஜ.க தேசிய இளைஞரணி சார்பில் காஷ்மீர் வெள்ளநிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பா.ஜ.கதேசிய இளைஞரணி சார்பில் இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் நிதிவசூல் செய்து வழங்கப்பட உள்ளது.

பொதுமக்களிடம் நிதிவசூலிக்கும் நிகழ்ச்சியை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க அகில இந்திய இளைஞரணி சார்பில் காஷ்மீர்மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி இந்தியாமுழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.

14-ந்தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க இளைஞரணியினர் நிதிசேகரித்து காஷ்மீருக்கு அனுப்ப உள்ளனர். பொது மக்கள் அனைவரும் அங்குள்ள நம் சகோதரர்களுக்கு உதவவேண்டும்.

வெள்ளையம்மாளை அ.தி.மு.க.வில் சேர்த்திருக்கிறார்கள் என்றசெய்தி வந்துள்ளது. இத்தகைய அரசியல், மிகுந்த மனக் கவலை அளிக்கிறது. வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ்வாங்குவதற்கு அ.தி.மு.க.தான் காரணம் என்று சொன்னோம். இன்று அவர் அதிமுக.வில் சேர்ந்திருப்பது அதை நிரூபிக்கிறது.

ஆனால் ஒருகட்சியின் வேட்பாளர் வாபஸ்பெறப்பட்டு அவரை வேறுகட்சியில் சேர்ப்பது ஜனநாயக முறைப்படி இது எப்படி சரியாக இருக்கும் என்பதையும், இது சரியான நடைமுறைதானா என்பதையும் பொது மக்களின் மனசாட்சிக்கே நான் விட்டு விடுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...