சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினம்

 சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பிரிந்து கிடந்த 562 சமஸ்தான ங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டின் இரும்புமனிதர் என்ற பெயரைப் பெற்றவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது பிறந்த நாள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடுமுழுவதும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி டெல்லியில் இன்று 'ஒற்றுமைக்கான ஓட்டம்' என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது.

ராஜபாதையில் விஜய்சவுக்கில் இருந்து இந்தியாகேட் வரை நடைபெறும் இந்த ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள் ,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஒற்றுமைக்கான ஓட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன் மத்திய அமைச்சர் வெங்கையா , ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் இதேபோன்று ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஓட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன் பங்கேற்பவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது., "சர்தார் வல்லாபாய் படேல் இல்லாமல் மகாத்மா காந்தி முழுமை அடைந்திருக்க மாட்டார்" என்று தெரிவித்தார்.

முன்னாதாக இன்று காலை பிரதமர் டிவிட்டரில் கூறுகையில், "சர்தார் வல்ல பாய் படேல் பிறந்த நாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவருடைய வாழ்க்கைபயணம் தாய்நாட்டுக்கான ஆழமான அர்பணிப்பு மற்றும் தைரியம் மிக்கது. நவீன இந்தியாவின் உண்மையான சிற்பி அவர் தான்" என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...