2-3 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதியை நிறுத்துவது சாத்தியம்

 கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துவருவதால் அடுத்த 2-3 ஆண்டுகளில் இறக்குமதியை நிறுத்துவது சாத்தியம் என்று மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நிலக்கரி உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாக கோல் இந்தியா உள்ளது. இன்று செயல் பாட்டில் உள்ள மின் திட்டங்களுக்கும், எதிர் காலத்தில் நிறுவப்பட உள்ள அனல் மின் நிலையங்களுக்கு போதியளவு நிலக்கரி சப்ளைசெய்யும் வகையில், 2019-ம் ஆண்டிற்குள் தனது உற்பத்தி திறனை இரண்டுமடங்கு அதிகரித்து 100 கோடி டன்னாக அதிகரிக்க வேண்டும் என்று கோல் இந்தியா நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தி யுள்ளது.

2022-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார். நிலக்கரிதுறையில் கோல் இந்தியாவுடன் போட்டியிடும் வகையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இன்றைய நிலையில் நாட்டின்மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்கு 80 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், நிலக்கரி இறக்குமதியை நிறுத்தும் இலக்கு உறுதியாக எட்டப்படும் என்றும், இப்போதுள்ள சூழலில் நிலக்கரி இறக்குமதியால் ஏற்படும் அன்னியசெலாவணி இழப்பு நடப்புகணக்கு பற்றாக் குறையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என உறுதியாக நம்புவதாகவும் கோயல் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...