பச்காவ் கிராமத்தை தத்து எடுத்தார் நிதின் கட்காரி

 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிராமங்களை தத்துஎடுத்து, அவற்றை மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நாக்பூர் தொகுதி எம்.பி.யும், மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் கப்பல்துறை மந்திரியுமான நிதின் கட்காரி நாக்பூரில்

இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்காவ் கிராமத்தை தத்து எடுத்து உள்ளார்.

இந்த கிராமத்தில் 4 ஆயிரத்து 923 மக்கள்தொகை உள்ளது. அங்குள்ள 761 வீடுகளில் 454 வீடுகளில் மட்டுமே கழிவறை உள்ளது. பச்காவ் கிராம தத்து எடுப்பு விழாவில் பங்கேற்க நிதின்கட்காரி, அந்த கிராமத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். வரவேற்க ஏராளமான கிராம மக்களும் திரண்டுவந்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் நிதின் கட்காரி பேசுகையில், ''இந்தகிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கழிவறைகட்ட தலா ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இங்கு முக்கிய விவசாய பயிராக பருத்தி மற்றும் காலிபிளவர் விளங்குகிறது. காலிபிளவர் விவசாயிகள் நலனுக்காக குளிரூட்டப் பட்ட கிடங்கி அமைக்கப்படும். மேலும் ரூ.25 லட்சம் செலவில் சமுதாயக் கூடம், ரூ.10 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...