ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கும் மலிந்து விட்டது

 முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் ஊழலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் மலிந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையை அடுத்துள்ள கோவில் பாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சிமுகாம் நடைபெற்றது. முகாமில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடுமுழுவதும் பாஜக-வில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. 18002662020 என்ற எண்ணில் மிஸ்டுகால் கொடுத்து உறுப்பினராக இணைந்துக் கொள்ளும் திட்டத்தின் மூலம், லட்சக் கணக்கானோர் தங்களை பாஜக-வில் இணைத்துக் கொண்டுள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாஜக-வில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

அனைத்துப் பிரச்சினைகளிலும் மத்திய அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஓ. பன்னீர் செல்வத்தின் ஆட்சியில் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினை மலிந்துவிட்டது.

வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் குறித்து துதிபாடாமல், மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முழு அதிகாரத்துடன் செயல்படவேண்டும்.

கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்திலான அவிநாசி-அத்திக்கடவு, பாண்டியாறு-புன்னம்புழா உள்ளிட்ட திட்டங்களை செயல் படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆழ் கடல் மீன் பிடிப்புத் திட்டத்தை பெற்றுத்தர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...