வைகோ வந்தால் பாஜக கூட்டணியில் மீண்டும் ஏற்ப்போம்

 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விட்டுவிட்டு வந்தால் பாஜக கூட்டணியில் மீண்டும் ஏற்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

இது குறித்து மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது; டிசம்பர் 20ம் தேதி சென்னைக்கு பாஜக.,வின் தேசிய தலைவர் அமீத்ஷா வருகிறார். அன்று மாலை சென்னையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மறுநாள் 21-ம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்ருகிறார். உத்தரப் பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றியை தேடித்தந்தவர் அமித்ஷா. தற்போது தமிழகத்தின் வெற்றிக்காக வருகிறார்.

வரும் 2016ல் பாஜக தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் அமித் ஷாவின் வருகை அமையும்.

தற்போது தமிழகத்தில் அதிமுக அரசு முடங்கியுள்ளது. சட்ட மன்றமும் செயல்படாமல் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாக உள்ளது. இதனால் மக்கள் மாற்று சக்தியை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று சக்தியாக பாஜக இருக்கும்.

இதை பொறுக்க முடியாத சிலர் பாஜகவின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் 2 சதவீதம் மக்கள் மட்டுமே மண்ணெண்ணெயை மூலம் சமையல் செய்கின்றனர். மற்றபடி வேறு வழியில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என தெரியவந்துள்ளது. இதற்க்கான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. ஆனால் அதற்குள் ஏழைகளுக்கான மண்ணெண்ணையை மத்திய அரசு நிறுத்தி விட்டது என அவதூறு கூறுகின்றனர்.

பாஜக தமிழுக்கு எதிரான கட்சி என சிலர் சில அமைப்பினர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோன்ற விமர்சனங்களால் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராரும் தடுக்க முடியாது.

மோடி சிறந்த மனிதர் என உலகமே பாராட்டுகிற வேளையில், வைகோ மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால் பாமக அப்படி அல்ல. அவர்களுடன் எங்களது கூட்டணி பலமாக உள்ளது

தூக்கு கயிற்றின் விளிம்பில் நின்ற 5 மீனவர்களை மத்திய அரசு மீட்டது. அதுபோல் மீனவர்களுக்கு என்றும் மத்திய அரசு துணை நிற்கும்.

ஆனால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் இரு நாடுகளின் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். அதையும் மத்திய அரசு விரைவில் செய்யும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...