அமித்ஷா சென்னை வருகை பிரமாண்ட ஏற்பாடுகள்

 அகில இந்திய பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.

அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்க பாஜக ஏற்பாடுகளை செய்து வருகிறது. நாளை மாலையில் மறைமலைநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.

அதற்காக தமிழக சட்டசபை வடிவத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்ட திடலில் சுமார் 1 லட்சம்பேர் அமர இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட மேடை நிகழ்ச்சி அனைவருக்கும் தெளிவாக தெரியும்வகையில் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. அதை தொடர்ந்து 4 மணிக்கு பொதுக் கூட்டம் தொடங்குகிறது.

மாலை 5 மணியளவில் அமித்ஷா பொதுக்கூட்ட மேடைக்குவருகிறார். இரவு 7.30 மணிக்கு பொதுக்கூட்டம் நிறைவு பெறுகிறது.

மறுநாள் (ஞாயிறு) காலையில் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

பிற்பகலில் குரோம் பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக உறுப்பினர்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் அங்கிருந்து விமானநிலையம் சென்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஏற்கனவே தமிழ் நாட்டின் மீது தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அமித்ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரது வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:–

பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பா.ஜ.க தொண்டர்கள் வருகிறார்கள். எப்படியும் ஒருலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தொண்டர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தனிபார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அமித்ஷாவின் வருகை தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமாநில தேர்தல்களை சந்தித்து திட்டமிட்டு சாதித்துகாட்டியவர். அவரது வழிகாட்டுதலும், அறிவுரைகளும் கட்சியில் ஊக்கத்தை உருவாக்கும் .

வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியே எங்களது செயல் பாடுகள் அமையும். அமித் ஷாவின் வருகையும், செயல்திட்டங்களும் நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...