கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் பாஜக-வில் சேர்ந்து வருகிறார்கள்

 நாடுமுழுவதும் ஜனவரி முதல் தேதி தொடங்கிய பாஜக தீவிர உறுப்பினர்சேர்க்கை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கேரளம் மற்றும் லட்சத் தீவுக்கான பாஜக மேலிடபார்வையாளரும் பாஜக தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா கூறியதாவது:

தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் கேரளத்தின் மக்கள் தொகை. தமிழகத்தில் சுமார் 60 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. கேரளத்தில் 21,424 வாக்கு சாவடிகளும் 140 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன. வரும் செப்டம்பரில் கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த மாநிலத்தில் உறுப்பினர் சேர்க்கையில் கூடுதல் கவனம்செலுத்தி வருகிறோம்.

இம்முறை பஞ்சாயத்து தலைவர் பதவிக்குக் கூட வேட்பாளரை நிறுத்த வேண்டும் என தேசிய தலைவர் அமித் ஷா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு முழுநேர ஊழியர் வீதம் நியமிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறோம். கேரளத்தில் பாஜக உறுப்பினர்களின் முந்தைய எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இது கடந்த 20 நாட்களில் 7 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 20 நாட்களில் 2.3 லட்சம் புதியஉறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

கடந்த சிலதினங்களாக தினமும் சராசரியாக 30 ஆயிரம்பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருவதால் இந்தமாத இறுதிக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துலட்சத்தைத் தாண்டிவிடும். மார்ச் 31-ம் தேதிக் குள் கேரள பாஜக உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை முன்பை காட்டிலும் நான்கு மடங்காக இருக்கும். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் பாஜக-வில் சேர்ந்து வருகிறார்கள். கடந்த 20-ம் தேதி, மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகர் ஏ.கே.கோபாலனின் சொந்த ஊரான கண்ணூர்மாவட்டம் பேரளச்சேரியிலிருந்தே 200 கம்யூனிஸ்ட் தோழர்கள் பாஜக-வில் சேர்ந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு கேரளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மக்களின் நம்பிக்கையை இழந்துவருகிறார்கள். இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...