அமெரிக்கா உதவியுடன் 3 ஸ்மார்ட் சிட்டிகள்

 அலகாபாத், அஜ்மீர் மற்றும் விசாக பட்டினத்தில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.நாடுமுழுவதும், 100 இடங்களில், 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்க, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர், உபி.,யின் அலகாபாத், ஆந்திராவின் விசாகபட்டினத்தில், ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க, அமெரிக்காவுடன் மூன்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதுதொடர்பான ஒப்பந்தத்தில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முன்னிலையில், அமெரிக்காவின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவன த்தின் அதிகாரிகளும், ராஜஸ் தான், ஆந்திரா மற்றும் உ.பி., அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய, அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து மூலம், இந்திய – அமெரிக்க ஒத்துழைப்பு புதிய பரி மாணத்தை அடைந்துள்ளது. ஒப்பந்தத்தின் படி, ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பது குறித்த சாத்திய கூறுகள் பற்றி ஆய்வுசெய்யவும், பயிலரங்கம் மற்றும் பயிற்சிகள் அளிக்கவும் அமெரிக்க வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உதவிசெய்யும். அத்துடன் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க, தேவையான நிதி ஆதாரங்களை திரட்டி தருவது, உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது போன்ற வற்றிலும், மற்ற அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல் படும். இது தவிர, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், நிதி ஆதாரங்களை திரட்டிதருவது உட்பட, பல விதமான உதவிகளை செய்யும். என்று , வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...