ஸ்ரீரங்கம் தொகுதிமக்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் ஊழலுக்கு எதிரான ஓட்டாக இருக்கவேண்டும்

 தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊழலை எதிர்த்து பாஜக போராடி கொண்டிருக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஊழல் குற்றச் சாட்டில் பதவியை இழந்து தொகுதியில் பிரசாரம் செய்யமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.

அதனால்தான் பொது மக்களிடம் ஊழலுக்கு எதிராக நாங்கள் தீவிரமாக பிரசாரம்செய்து வருகிறோம். ஸ்ரீரங்கம் தொகுதிமக்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் ஊழலுக்கு எதிரான ஓட்டாக இருக்கவேண்டும். இதுதான் எங்கள் பிரசாரம்.

வளர்ச்சியை நோக்கி பாரததேசம் சென்று கொண்டிருக்கிற நிலையில் ஸ்ரீரங்கமும் தேசிய நீரோட்டத்தில் கலக்கவேண்டும். மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வரமுடியும் என்றால் பா.ஜ.க.,வால் தான் முடியும். இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் ஆணையம் இன்னும் அதிக கவனமாக இருக்கவேண்டும் .

27 அமைச்சர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 10 வாக்குச் சாவடி மையத்திற்கு ஒரு அமைச்சர் என்றவீதம் அதிகாரம் தலை விரித்தாடுகிறது. தற்போது பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளைவிட கூடுதலாக தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. 27 அமைச்சர்கள் அளவிற்கு தேர்தல்ஆணைய அதிகாரிகள் வாக்குச்சாவடி அளவிற்கு நியமிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மோடியால் மத்தியில் நல்லாட்சி நடை பெறுகிறது. ஸ்ரீரங்கத்தில் மக்கள் மனநிலையில் மாற்றம் உள்ளது. ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சுப்பிர மணியத்திற்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.

இதனை பார்த்துதான் மற்ற கட்சிகள் பயப்படுகின்றனர். 2 திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க. தான். வருங்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...