முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் ஓட்டுவங்கி அரசியல்

 முஸ்லிம் இட ஒதுக்கீட்டில் ஓட்டுவங்கி அரசியலை தவிர்த்து எதிர்க் கட்சிகளுக்கு உண்மையான அக்கறை கிடையாது என்று சட்ட சபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.

மராட்டியத்தில் முந்தைய காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ் கூட்டணி அரசின் கடைசிகட்டத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் காலாவதி முடிந்ததால், அந்த சட்டத்தை ரத்துசெய்ததாக கடந்த வாரம் பா.ஜ.க, சிவனோ கூட்டணி அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

நேற்று நடந்த சட்ட சபை கூட்டத்தில் இந்த பிரச்சினையை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பூதாகரமாக எழுப்பினர். எதிர்க் கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் (காங்கிரஸ்) பேசுகையில், முஸ்லிம்களுக்கு கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க ஐகோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே அரசு இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றவேண்டும்'' என்றார்.

இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து பேசியதாவது:–

முஸ்லிம் இடஒதுக்கீடு வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இறுதிதீர்ப்பு இன்னும் கூறப்படவில்லை. இந்த பிரச்சினையில் அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் அரசு நடந்துகொள்ளும். ஓட்டுவங்கி அரசியலுக்காக இந்த பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் தூக்கியுள்ளன. முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பான உண்மையான அக்கறை எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது.

வக்பு வாரிய நிலம் சட்ட விரோதமாக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள்தான் அப்போது ஆட்சியில் இருந்தனர். அப்போது அரசு என்னசெய்தது என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

முஸ்லிம் இடஒதுக்கீடு பிரச்சினையில் அரசு சட்ட ஆலோசனை கேட்டுவருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே சட்ட ஆலோசனைபெற்று உரிய நடவடிக்கை எடுப்போம். கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில், முஸ்லிம் மாணவர்களுக்கு ஏற்கனவே 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...