மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடும் பிரதமர்

 வானொலி மூலம் மக்களிடம் நேரடியாக உரை யாற்றும் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுடன் உரையாடுகிறார்..

இந்நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் வரும் 22 ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் வேளாண் மற்றும் அதன் சார்துறைகள் பற்றி உரையாடுவார். விவசாயிகளுடன் மற்ற குடிமக்களும் தங்கள் கருத்துக்களை "mygov.in" என்ற இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சிமூலம் இது வரை பிரதமர் ஐந்து முறை நாட்டு மக்களுடன் உரையாற்றியுள்ளார். மக்களின் மனதிற்கு நெருக்கமான பலபிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். தூய்மை இந்தியா திட்டம், காதிமேம்பாடு, திறன் மேம்பாடு, ஊனமுற்றோர்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு குறித்து அவர் உரையாடினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் முந்தையபகுதி கடந்த பிப்ரவரி மாதம் 22 ம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமர், தேர்வு குறித்த மனக் கவலையையும் கலக்கத்தையும் விட்டுத்தள்ளி ஒருசாதகமான அணுகு முறையை மேற்கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த மனதின்குரல் நிகழ்ச்சியில் பிரதமர் ஒருமுறை அமெரிக்க அதிபர் ஒபாமா உடன் பகர்ந்து கொண்டார். அப்போது இரு தலைவர்களும் பலபிரச்சனைகள் குறித்து மக்களிடம் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது. அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் அதேநேரம் இந்த நிகழ்ச்சி பொதிகை, விவித்பாரதி, எப்.எம். கோல்ட், ரெயின்போ வானொலி ஆகியவற்றில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் அலுவலக இணையதளம் மூலமாகவும் இந்த நிகழ்ச்சியை காணலாம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...