இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி நதியின் குறுக்கே புதிய அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகளின் கூட்டமைப்பு 28ம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் அறிவித்திருக்கிறது. பந்த் அறிவித்த தினத் தன்று ராம நவமி வருவதால், அந்த தேதியை 29ம் தேதிக்கு மாற்றி அமைத்திட இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்தால் அனைவரும் இதில் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும். தமிழக விவசாய உற்பத்தியில் காவிரி நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது.
காவிரியில் நமது உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த கடையடைப்பை வரவேற்கிறோம். மாநில மக்களின் உணர்வுகளை வெளிப் படுத்திட கடையடைப்பு நடத்தும்போது எல்லோருடைய ஆதரவைப்பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்ததேதியை மாற்றி அமைத்திட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ராம நவமி தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புரிந்துகொண்டு, போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.