அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

 கடந்த 2014 பொதுத்தேர்தலுக்கு பின்னர், இந்தியாவில் மத ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், 2014 தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான அவதூறு விமர்சனங்கள், வன்முறை தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையிலான கட்டாயமதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

இவை ஆளும பாஜக அரசியல்வாதிகள் ஆதரவுடன் நடக்கின்றன, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் சிறு பான்மையினர் மீதான சகிப்புத் தன்மை குறைந்து வருவதுதொடர்பாக அதிபர் ஒபாமா இந்திய அரசுக்கு அழுத்தம்கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாள விகாஸ்ஸ்வரூப் கூறும் போது, அமெரிக்காவின் சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான ஆணையம், இந்திய மதச்சுதந்திரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை நம் கவனத்துக்கு வந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை ஆராய்ந்த போது, இந்தியா மீதான் குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாது, இந்திய சமூகம், அரசியல் சாசனம் பற்றி தெளிவானபுரிதல் இல்லாமல் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை, எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...