ஊழலை சுட்டிக் காட்ட, காங்கிரஸுக்கு உரிமை உண்டா

 ஊழலை சுட்டிக் காட்ட, காங்கிரஸுக்கு தார்மீக உரிமை உண்டா என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் திருப்பூரில் கேள்வி எழுப்பினார்.

மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நடந்தது. இதில், பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய மாற்று சக்தியாக வளர்ந்து வருகிறது. இரண்டு கழகங்களுக்கு இடையே, வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

வரும் 16-ம் தேதி, 'தமிழக மக்களோடு மத்திய அரசு' என்ற புதியதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்துகிறார். இதில், மத்திய அமைச்சர்கள் 29 பேர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறார்கள். தமிழகமக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், அதை மத்திய அரசு பரிசீலிக்கும் தொடக்க நிகழ்வு அது.

வாரந் தோறும் சனிக்கிழமைகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசு சம்பந்தமான கோரிக்கைளை பொது மக்கள் அளித்தால், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து, நிவர்த்தி செய்யப்படும். தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களில், 29 மத்திய அமைச்சர்கள், 3 மாநில முதல்வர்கள் என 32 பேர் தமிழக மக்களை சந்திக்க வருகிறார்கள். திருப்பூருக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சர் வர இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் ஊழலை சுட்டிக் காட்டிய வகையில் மகிழ்ச்சி. ஆனால், அதற்குகூட காங்கிரஸூக்கு தார்மீக உரிமை உண்டா? என்பது மிகப் பெரிய கேள்வி. 2 ஜியில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம்சொல்கின்றனர். காங்கிரஸை மக்கள் நம்பமாட்டார்கள்.

நிலம் கையகப்படுத்தல் மசோதா, விவசாயிகளுக்கு பாதுகாப்பான மசோதா ஆகும். ரியல் எஸ்டேட் மசோதா குறித்து ராகுல் பேசுகிறார்.

அவர், விடு முறையில் இருந்து, இன்னும் விடுபட வில்லை. அது, ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்தரும் மசோதா. சாலை பாதுகாப்பு மசோதாவில், வாகன ஓட்டிகளின் உயிருக்கு பாதுகாப்புள்ளது. இரண்டொரு நாட்களில் வரவுள்ள நீர்வழிப்பாதை மசோதா உள்ளிட்ட ஒவ்வொரு மசோதாவிலும் உள்ள சின்னஞ்சிறிய குறைகளை ஊதிப் பெரிது படுத்துகிறார்கள்.

சாலை பாதுகாப்பு மசோதா என்பது பசுத்தோல் போர்த்திய புலி என கருணாநிதி சொல்லியுள்ளார். அது, புலித்தோல் போர்த்திய பசு. தமிழக அரசு முற்றிலும் முடங்கிப்போய் கிடக்கிறது. முடங்கிக்கிடக்கும் அரசுக்கு, வரும் தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...