இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை

 இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில், கடந்த காங்கிரஸ் அரசு மீது கடும் குற்றச் சாட்டை முன்வைத்தும், பிரதமர் மோடியின் பாஜக அரசை புகழ்ந்தும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அருண்ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கித்தான் கொண்டு சென்றது. கடந்த கால காங்கிரஸ் அரசுபோல ஊழல்பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. இந்தியாவின் அரசியல் அகராதியில் இருந்து ஊழலை பாஜக அரசு அறவே நீக்கி விட்டது.

கடந்த காங்கிரஸ் அரசின் போலி முதலாளித்துவம்போல இல்லாமல், பொதுமக்களை துன்புறுத்தாமல், அதே வேளையில், நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றும் கொள்கைகளை உருவாக்கி பாஜக அரசு செயல்படுத்திவருகிறது.

மத்திய அரசின் அனுமதிக்காக தொழிலதிபர்கள் யாரும் வெளியே வரிசையில் காத்துநிற்கும் அவலநிலை இப்போது இல்லை. மத்திய அரசின் அலுவலகங்களின் வராண்டாக்கள் தற்போது மிகவும் அமைதியாகவும், காலியாகவும் உள்ளன. பிரதமர் நரேந்திர+-மோடி மூலம் இந்தியா பெருமைப்படுத்தப்பட்டு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...