இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை

 இந்தியாவில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி விட்டதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில், கடந்த காங்கிரஸ் அரசு மீது கடும் குற்றச் சாட்டை முன்வைத்தும், பிரதமர் மோடியின் பாஜக அரசை புகழ்ந்தும் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அருண்ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி நாட்டை வளர்ச்சி பாதையை நோக்கித்தான் கொண்டு சென்றது. கடந்த கால காங்கிரஸ் அரசுபோல ஊழல்பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. இந்தியாவின் அரசியல் அகராதியில் இருந்து ஊழலை பாஜக அரசு அறவே நீக்கி விட்டது.

கடந்த காங்கிரஸ் அரசின் போலி முதலாளித்துவம்போல இல்லாமல், பொதுமக்களை துன்புறுத்தாமல், அதே வேளையில், நாட்டின் பொருளா தாரத்தை முன்னேற்றும் கொள்கைகளை உருவாக்கி பாஜக அரசு செயல்படுத்திவருகிறது.

மத்திய அரசின் அனுமதிக்காக தொழிலதிபர்கள் யாரும் வெளியே வரிசையில் காத்துநிற்கும் அவலநிலை இப்போது இல்லை. மத்திய அரசின் அலுவலகங்களின் வராண்டாக்கள் தற்போது மிகவும் அமைதியாகவும், காலியாகவும் உள்ளன. பிரதமர் நரேந்திர+-மோடி மூலம் இந்தியா பெருமைப்படுத்தப்பட்டு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...