தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது

 மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் கூட்டணியில் பாமக வெவ்வேறு கொள்கைகளை கடைப்பிடிக்கிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கேட்டுக் கொண்டார்.

பாஜக சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள்தொடர்பு இயக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பங்கினால் தான் தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெற்றது என்பதை உணரவேண்டும். தேசியத்தில் கூட்டு, மாநிலத்தில் கூட்டு இல்லை என்பதை யாரும் நம்பமாட்டார்கள். எனவே வேறுபாட்டுத்தனமாக பேசுவதை அந்தக்கட்சி கைவிட வேண்டும்.

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் பாமகவுக்கு உண்மையாக இருந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும்.

தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. அனைத்துத் துறை களிலும் ஊழல் பெருகியுள்ளது. அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தத்தை எந்த அடிப்படையில் செய்து கொண்டது என்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிக்கையை வெளியிடவேண்டும்.

அதானி குழும விவகாரத்தில் வைகோ, இளங்கோவன் போன்றவர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

பாஜக முதல்வர்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பாஜகவினர் குற்றமற்றவர்கள் என்பது விசார ணையில் தெளிவுபடுத்தப்படும்.

தமிழக காய்கறிகள் பரிசோதனை செய்து அதில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பாதிப்பில்லை என்பதை கேரள அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இங்கு, காய்கறி, மருந்துகள், பால்போன்றவை பரிசோதிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

காய்கறிகள் விவகாரத்தில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...