கேரளாவில் பாஜக துணையுடன் ஈழவா சமூகத்தின் வெள்ளாப் பள்ளி நடேசன் ஆரம்பிக்கும் கட்சியை ஆதரிக்க தயார் என்று கேரள நம்பூதிரி பிராமணர்கள் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது.
கேரளாவில் 25% உள்ள பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவராக இருப்பவர் வெள்ளாப்பள்ளி நடேசன். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி, பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ். இயக்கத் தலைவர்களையும் அவர் சந்தித்துபேசினார்.
இதனை தொடர்ந்து தாம் ஒருபுதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் உள்ளாட்சி தேர்தலில் அது பாஜக.வுடன் இணைந்து 3வது அணியாக தேர்தலை சந்திக்கும் எனவும் அறிவித்தார். கேரளா அரசியலில் இதுபெரும் புயலை கிளப்பியது. குறிப்பாக இடதுசாரி கட்சிகளை இது அலற வைத்தது. ஈழவா சமூகத்தில் பெரும்பகுதியானோர் இடதுசாரி ஆதரவாளர்கள். ஆகையால் இது இடதுசாரிகளுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் வெள்ளாப்பள்ளி நடேசனுக்கு எதிரான பிரச்சாரத்தில் இடதுசாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளாப் பள்ளி நடேசனின் புதியகட்சியை ஆதரிக்க போவதாக கேரளா நம்பூதிரி பிராமணர்களின் சங்கமான யோகக்ஷேம சபா அறிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈழவா சமூகத்தினரை கடுமையாக ஒதுக்கி வைத்த நம்பூதி பிராமணர்கள் போன்ற முற்படுத்தப்பட்ட ஜாதியினரும் அவர்களுடன் அரசியல் ரீதியாக கைகோர்க்க தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
இதுகுறித்து நம்பூதிரி பிராமணர்கள் சங்கத்தின் தலைவரான பட்டாதிரி பாட் ஊறுகையில், கேரளாவின் இந்து அமைப்புகளின் கூட்ட மைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதில் நாங்களும் ஒருஅங்கமாக இருக்கிறோம். வெள்ளாப் பள்ளி நடேசனின் அரசியல்கட்சி தொடங்கும் முயற்சியை ஆதரிக்கிறோம். பல்வேறு இந்து அமைப்புகள் நவம்பர் 23-ந் தேதியன்று காசர் கோடு முதல் திருவனந்தபுரம் வரை நடத்தும் ரத யாத்திரையில் நாங்களும் பங்கேற்போம் என்றார்.
கேரளாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும் வலுவாக இருக்கின்றன. இதனால் இதுவரை பாஜக.வால் இம்மாநிலத்தில் நுழையமுடியாத நிலை இருந்தது. இதனால் இந்து சமூக இயக்கங்களை ஒன்றிணைத்து அதன்மூலம் எப்படியும் கேரளாவுக்குள் நுழைந்து விடுவது என்ற பாஜக.வின் முயற்சிக்கு ஈழவா, நம்பூதி பிராமணர்கள் அமைப்புகள் கைகொடுத்திருப்பது நம்பிக்கையை விதைத்துள்ளது.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.