மக்களுக்கு தாயத்து தேவையில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும் தான் தேவை

 சந்தர்ப்பவாத கூட்டணியினர், இடஒதுக்கீடு விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். தலித்கள், மகா தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆகியோரிடம் இருந்து 5 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து, ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நான் மிகவும¢ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன். அதனால் அந்தவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தசதியை நான் அனுமதிக்க மாட்டேன். தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பேன்.

ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ.வும். ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளரும் லஞ்சம்வாங்கும் காட்சி, வீடியோ படமாக வெளிவந்துள்ளது. ஆனால், ஊழலுக்கு எதிராகபேசும் அக்கட்சி தலைவர்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை, பணத்தை எடுப்பது ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு ஓட்டுபோட்டால், பீகாரையே விற்று விடுவார்கள். மீண்டும் காட்டாட்சி திரும்பும்.

இது, மாற்றத்துக்கான திருவிழா. ஓட்டு எண்ணிக்கை அன்று, 25 ஆண்டு கால மோசமான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி விழும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பா.ஜ.க கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்பதால், மகாகூட்டணி தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர். என்னை களங்கப் படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மந்திர வாதிகளை நாடுகிறார்கள். உங்களுக்கு மந்திர, தந்திரம் வேண்டுமா? ஜனநாயகம் வேண்டுமா? இந்த 18ம் நூற்றாண்டு சிந்தனை, பீகாருக்கு பயன்தராது. மக்களுக்கு தாயத்து தேவை யில்லை. வேலைவாய்ப்பும், முன்னேற்றமும்தான் தேவை.

பா.ஜ.க வை ஆட்சியில் அமர்த்தினால், பீகாரை புதிய உயரத்துக்கு இட்டுச்செல்வோம். மத்திய அரசுக்கு எதிராக சொல்வதற்கு ஒன்றும் இல்லாததால், எதிரிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள்.

லாலுவும், நிதிஷ்குமாரும் தங்களது 25 ஆண்டுகால ஆட்சியில் செய்தவற்றை பற்றி கூறமுடியுமா? அப்படி எதுவும் கூற முடியாவிட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?

பீகாருக்கு எதுவுமே செய்யாத காங்கிரஸ் தற்போது பாஜக மீது குற்றம் சாட்டுகிறது .   பீகார் மக்களுக்கு இன்னும் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை அனைத்து  வளங்கள் இருந்தும் இதுவரை பீகார் வளர்ச்சி அடையாதது ஏன்?. 2வது பசுமை புரட்சி பீகாரிலிருந்து தொடங்க வேண்டும்.

பீகார் சட்ட சபை தேர்தலையொட்டி, பக்சார் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல்பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு  பேசியது:-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...