குடும்ப ஆட்சியைப்பற்றி குறை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தவித அருகதையும் இல்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் அந்த பகுதி மக்களின் நலன்கருதி தயாரித்த தேர்தல்-அறிக்கையை
பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, குடும்ப ஆட்சியை பற்றி குறைசொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தஅருகதையும் இல்லை. ஆட்சிக்குவந்தால் மன்னார்குடி குடும்பத்தின் தலையீடு-இல்லாமல் ஆட்சிநடத்த இயலும் என ஜெயலலிதாவால் வாக்குறுதி தர முடியுமா?.
தமிழகத்தில் மணல்கொள்ளையை அறிமுகபடுத்தி வைத்ததே அதிமுக ஆட்சி காலத்தில் தான். கடந்த 2003ம் ஆண்டு மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார்-படுகொலை செய்யபட்டதை மக்கள் மறந்துவிடவில்லை என தெரிவித்தார்
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.