குடும்ப ஆட்சியைப்பற்றி குறை சொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தவித அருகதையும் இல்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் அந்த பகுதி மக்களின் நலன்கருதி தயாரித்த தேர்தல்-அறிக்கையை
பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, குடும்ப ஆட்சியை பற்றி குறைசொல்வதற்கு ஜெயலலிதாவுக்கு எந்தஅருகதையும் இல்லை. ஆட்சிக்குவந்தால் மன்னார்குடி குடும்பத்தின் தலையீடு-இல்லாமல் ஆட்சிநடத்த இயலும் என ஜெயலலிதாவால் வாக்குறுதி தர முடியுமா?.
தமிழகத்தில் மணல்கொள்ளையை அறிமுகபடுத்தி வைத்ததே அதிமுக ஆட்சி காலத்தில் தான். கடந்த 2003ம் ஆண்டு மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார்-படுகொலை செய்யபட்டதை மக்கள் மறந்துவிடவில்லை என தெரிவித்தார்
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.