வியாபாரம் ஒருவருக்கு கூடுவதற்க்கோ, குறைவதற்க்கோ எந்த திட்டமும் இல்லை

தமிழக – கேரள எல்லையான காரோடு முதல் வில்லுக் குறி வரை 4 வழிச் சாலை அமைக்க ரூ.1,274.34 கோடியும், வில்லுக்குறி முதல் கன்னியா குமரி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு வரையிலும் 4 வழிச் சாலை அமைக்க ரூ.1,041.98 கோடியும், நாகர்கோவில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.286.95 கோடியும் ஒதுக்கி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டம் வகுத்தது.

இந்த திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மார்த்தாண்டம் பஸ்நிலையம் அருகில் ஜோஸ்கோ மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மத்திய சாலைபோக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதேபோல தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உள்பட தமிழகத்தை சேர்ந்த பல எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

அடிக்கல் நாட்டு விழாவை யொட்டி மார்த் தாண்டத்தில் மேடையும், பந்தலும் அமைக்கும்பணி தீவிரமாக நடந்துவருகிறது. இந்த பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதவாது:–

குமரிமாவட்டம் மார்த்தாண்டத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றால் சிறு மற்றும் பெரியகடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என புரளியை கிளப்பிவருகிறார்கள்.

மேம்பாலம் அமைப்பது போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்காக மட்டும் தான். வியாபாரம் ஒருவருக்கு கூடுவதற்காகவோ, குறைவதற்காகவோ தேசியநெடுஞ்சாலை ஆணையத்தில் திட்டங்கள் எதுவும் கிடையாது.

மார்த்தாண்டத்தில் உள்ள தற்போதைய சாலையில் வியாபாரிகள் விரும்புவது போல் 4 வழிச் சாலை அமைக்க வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்சம் ஒருபக்கத்துக்கு 90 அடி வீதம் இருபக்கமும் இடம் எடுக்கபடும். அப்படியானால் தற்போது இருக்ககூடிய கடைகளில் 80 சதவீதகடைகள் இடிபட்டு போகும். இது புரியாமலேயே சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மேம்பாலம் அமையும்போது கடைகள் பாதிக்காத வகையில் சர்வீஸ்சாலைகள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இருக்காது. மேலும் இந்த பாலங்கள் 24 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...