பாரதத் தாய் தனது ஒரு மகனை இழந்து விட்டார்

எனது நாட்டை சேர்ந்த இளைஞர் ரோஹித், தற்கொலைக்கு தள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதத் தாய் தனது ஒரு மகனை இழந்து விட்டார். அவரது தற்கொலைக்கு காரணங்கள் இருக்கலாம்; அதைச்சுற்றி, அரசியல் இருக்கலாம். ஆனால் இதில், ஒருதாய் தனது மகனை இழந்து விட்டார் என்பதே உண்மை. அந்த வேதனையை நானும் உணர்கிறேன்.

 21-ஆவது நூற்றாண்டில் இந்தியா தான் உலகிலேயே இளமையான நாடு என்று தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்கள் வேதனையை தருகின்றன. புதிய உற்சாகம், தன்னம்பிக்கை ஆகியவற்றை நோக்கியபாதையில் நாட்டைக் கொண்டு செல்ல விரும்புகிறோம். அம்பேத்கர் கண்ட கனவை நோக்கிய வளர்ச்சிப்பாதையில் நாட்டைக் கொண்டு செல்வதற்கான தொடர் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

அம்பேத்கர் இந்தநாட்டுக்காக பல்வேறு தியாகங்கள் செய்துள்ளார். கல்வியில் புரட்சிசெய்துள்ளார். அவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் அவரது சமூகபணியில் இருந்து அவர் விலகவில்லை.

உயர்ந்த எண்ணங்கள், தொலை நோக்கு எண்ணம் கொண்டவராக வாழ்ந்தார். எத்தனை இன்னல்கள் வந்தாலும் அவர் மனம் தளரவில்லை. அம்பேத்கர் ஏழைகளுக்காக, தலித் மக்களுக்காக உழைத்தார். இந்த நாட்டிற்காக வாழ்ந்து இந்தநாட்டிற்காக உயிரை துறந்த சிறந்த சிந்தனையாளர்.

மாணவர்களாகிய நீங்கள் எவ்வளவு தூரம் கற்கிறீர்களோ அந்தளவிற்கு வாழ்வில் எந்த சவாலையும் சந்திக்க முடியும். தோல்விகளே வெற்றியின் அடிக்கல்லாக அமையும் .மாணவர்கள் ஊக்கம் இழக்காமல் உழைக்க வேண்டும்.

லக்னோவில் உள்ள அம்பேத்கர் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...