இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம்


இளைஞர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவுத் திறனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்துவது அவசியம் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.

தமிழகத்தைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோருடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

  இதில் அவர் பேசியது:  மத்திய அரசு தற்போது அறிமுகப் படுத்தியுள்ள "எழுந்திரு இந்தியா' திட்டத்தின் மூலம் அதிக தொழில் முனைவோர் உருவாக்கப்படுவர். அவர்களுக்குத் தேவையான நிதி யுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பட்டம்பெற்ற பொறியாளர்கள் இதை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்.

  இந்திய இளைஞர்களால் தான் அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் வளர்ச்சிபெற்றுள்ளன என்று நமது இளைஞர்களுக்கு பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். எனவே முகநூல், கட்செவி-அஞ்சல் ("வாட்ஸ் ஆப்') போன்ற புதிய சமூக வலை தளங்களை உருவாக்க இந்திய இளைஞர்கள் பல்வேறு தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 மேலும் நாட்டின் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு இளைஞர்கள் தங்களின் தொழில்நுட்ப அறிவை முதலில் நமதுநாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் வல்லரசுப் பட்டியலில் இந்தியா விரைவில் இடம் பெறும்.

  விஜய் மல்லையா போன்று நாட்டை ஏமாற்றும் தொழிலதிபர்களுக்கு காங்கிரஸ் அரசு கடன்வழங்கியுள்ளது. ஆனால், முறுக்கு விற்பவர் பெரிய தொழிற்சாலைகளை தொடங்குபவர் வரை அனைவருக்குமான கடனுதவியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கி வருகிறார். இதிலிருந்தே இருகட்சிகளுக்குமான வித்தியாசத்தை மக்களால் உணர முடியும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...