3-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழகத்தில் 15 நாட்களுக்கு கொண்டாட உள்ளோம்

மத்தியில் பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழகத்தில் 15 நாட்களுக்கு கொண்டாட உள்ளதாக  மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவுற்று 3-ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று இனிப்புவழங்கி கொண்டாடினர். அப்போது, மத்திய அரசின் 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய புத்தகத்தை பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட, மூத்த தலைவர் இல.கணேசன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:

பாஜக அரசு 2 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. பிரதமர் மோடி ஓய்வின்றி மக்களைப்பற்றியே சிந்தித்த வண்ணம் உள்ளார். நாட்டின் 60 சதவீத மக்கள் மோடி அரசில் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளனர். காங்கிரஸ் தனது 10 ஆண்டுகால சாதனைகளை சொல்லாமல், பாஜக அரசைவிமர்சித்து குறும்படங்களை வெளியிட்டு வருவது கண்டிக்கத் தக்கது. அவர்கள் என்ன குற்றச் சாட்டுகளை சொன்னாலும் மக்களிடம் இருந்து மோடியை பிரிக்கமுடியாது.

மத்திய பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்கத்தை தமிழகத்தில் 15 நாட்களுக்குகொண்டாட உள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் 7 மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...