மத்தியில் பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்கவிழாவை தமிழகத்தில் 15 நாட்களுக்கு கொண்டாட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவுற்று 3-ம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று இனிப்புவழங்கி கொண்டாடினர். அப்போது, மத்திய அரசின் 2 ஆண்டு சாதனைகள் அடங்கிய புத்தகத்தை பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட, மூத்த தலைவர் இல.கணேசன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
பாஜக அரசு 2 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. பிரதமர் மோடி ஓய்வின்றி மக்களைப்பற்றியே சிந்தித்த வண்ணம் உள்ளார். நாட்டின் 60 சதவீத மக்கள் மோடி அரசில் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளனர். காங்கிரஸ் தனது 10 ஆண்டுகால சாதனைகளை சொல்லாமல், பாஜக அரசைவிமர்சித்து குறும்படங்களை வெளியிட்டு வருவது கண்டிக்கத் தக்கது. அவர்கள் என்ன குற்றச் சாட்டுகளை சொன்னாலும் மக்களிடம் இருந்து மோடியை பிரிக்கமுடியாது.
மத்திய பாஜக ஆட்சியின் 3-ம் ஆண்டு தொடக்கத்தை தமிழகத்தில் 15 நாட்களுக்குகொண்டாட உள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் 7 மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் இவ்வாறு தமிழிசை கூறினார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.