கைரானா நிலவரம் 7 பேர் கொண்டகுழு

உ.பி யில் முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி இந்துக்குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறுவதாக கூறப்படும் விவகாரத்தை பாஜக தீவிரமாக கையாளத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து கள ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்துள்ள பாஜக, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித் துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கைரானா பகுதியில் ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தலுக்கு அஞ்சி அங்கு வசித்து வந்த 346 இந்துகுடும்பங் கள் ஊரைவிட்டு வெளியேறியதாக பாஜக எம்பி ஹுக்கும்சிங் கடந்தவாரம் தகவல் வெளியிட்டார்.

கடந்த 2013-ம் ஆண்டு முசாஃபர் நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவரான இவர், கைரானாவில் முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்துக்கள் ஊரைவிட்டு வெளியேறியதாகக் கூறினார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு, உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி.,க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தர விட்டுள்ளது. மக்கள் வெளியேறியதை காவல்துறை உறுதிப்படுத்தாத நிலையில், இவ்விவகாரத்தை பாஜக தீவிரமாக கையாளத் தொடங்கியுள்ளது.

கைரானா நிலவரம் குறித்து நேரில் ஆய்வுசெய்ய, கட்சி சார்பில் 7 பேர் கொண்டகுழு ஒன்றை பாஜக அமைத்துள்ளது. இக்குழுவினர் கள ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கப் போவதாக, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.

அலகாபாத்தில் நேற்று நடை பெற்ற பாஜக தேசியசெயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற போது செய்தி யாளர்களிடம் இதுகுறித்து கூறிய அவர், ‘சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள் தங்கள் வசிப்பிடத்தில் இருந்து மொத்தமாக வெளியேறுவது ஜனநாயகத்துக்கு நல்ல தல்ல. அதனால்தான் இவ்விவகாரத்தை பாஜக மிக முக்கியமானதாக கருதுகிறது’ என்றார்.

‘நாட்டின் பெரியமாநிலமான உ.பி.யில் ஆட்சி நிர்வாகம் சரியில்லை. கைரானா பகுதியில் வன்முறை சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக மக்கள் வெளியேறுவது மிக முக்கியமான பிரச்னை’ என, பாஜக தலைவர் அமித் ஷாவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...