அமித்ஷா விரைவில் தமிழகம் வர உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலை பா.ஜ.க. சவாலாக சந்திக்கும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பா.ஜ.க. பேச்சாளர் களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சிமுகாமை மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப் படுவது தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்று சைபர் கிரைம் புகார்களை விசாரிக்க போலீசில் தனிப் பிரிவை உருவாக்க வேண்டும். போலீசாரின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாதநிலைதான் உள்ளது. மக்களின் நம்பிக்கைக் குரியவர்களாக போலீசார் விளங்கவேண்டும். முதலில் குற்றங்களை குறைக்க காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்.
பஸ் நிலையம், ரெயில்நிலையம், ஐ.டி. பார்க் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிசிடிவி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். போலீசார் இரவு ரோந்துபணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சிதேர்தலை நாங்கள் சவாலாக எடுத்துக் கொண்டு சந்திப்போம். உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற மாநிலதேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சியின் தேசியதலைவர் அமித்ஷா விரைவில் தமிழகம் வரஉள்ளார். உள்ளாட்சி தேர்தல்தொடர்பாக அவர் எங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.