பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில்மாறும்

டெல்லியில் நிதி ஆயோக்சார்பில் மெத்தனால் பொருளாதாரம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்துகொண்டார். அப்போது, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில்மாறும் என்று அவர் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துவந்தாலும் அவற்றை இறக்குமதி செய்வதற்கு ரூ.4.7 லட்சம் கோடிவரை இந்தியா தற்போது செலவழித்து வருகின்றது.

பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி (இயற்கை எரிவாயு), நிலக்கரி போன்ற எரி பொருட்கள் பயன் படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. இதன்மூலம் கிராமப்புறங்கள் மற்றும் விவசாயத் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் சரிவுகளை சந்தித்துவரும் சமூக பொருளாதார சூழ்நிலை மற்றும் விவசாய தொழில்களை மேம்படுத்தலாம். கிராம மக்கள் மற்றும் விவசாயத்தை பாதுகாப்பதற்கு மாற்று வழியை நாடுவதற்கான நேரம் இதுவாகும்.

பெட்ரோலியத்திற்கு மாற்றாக இயற்கை எரி பொருட்களை ஊக்குவித்தால், பெட்ரோலித்தை இறக்குமதிசெய்யாத நாடாக இந்தியா விரைவில் மாறும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...