மோடி அரசு மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டாட்டமே

என்னுடைய அரசியல் ஜோசியத்தில் தோன்றுவது; அமேரிக்கா ஒரு சிறிய கொள்கை மாற்றம் செய்ததில் – எண்ணெய் விலை வீழ்ச்சியினால் அரபு நாடுகள் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அவர்கள் பொருளாதாரம்தான் உலகத்தில் தீவிர வாதத்திற்கு துணை.


மேலும் அமெரிக்காவின் ராஜதந்திரம் என்று நாம் ஆயிரம் கூறினாலும், யார் யார் எப்போது எப்படி போவார்கள் என்பதை நன்கு யூகிக்கும் திறம் கொண்ட உளவுப்பிரிவு அவர்களிடம் உள்ளது . அமேரிக்கா இதுவரை மிக மிக செல்வாக்கான அரபு நாடுகளுக்கு பெரிய தொழில் நுணுக்கம், தொழில் உதவி எதுவும் செய்யவில்லை. அணு ஆயுத பரவல் தடுப்பு என்று ஐநா மூலம் கண்காணிப்பு. — """சிந்திக்காமல் அணுசக்தியை உபயோகிப்பவர்கள் இவர்கள்""" என்று அறிந்தே — இந்த நாடுகளை கொஞ்சம் அமுக்கி வைத்தது வந்தது.

ரபுநாடுகள் அவர்கள் சேமித்த பணத்தில், ஆடம்பர வாழ்க்கை, // பிரம்மாண்ட மாளிகைகள் // தேவையற்ற சிலவுகள் பக்கம் அவர்கள் நாட்டத்தை திரும்பிவிட்டனர். இரான் நாட்டு அதிபர் ""ஷா ஆப் ஈரான்"" புரட்சியில் தூக்கி எறியப்பட்டதும் — உலக நாடுகளுக்கு வியப்பு –, குளியல் அரை, கழிப்பறை எல்லாம் தங்கத்தால் இருந்தது. அவர் ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். இதே நிலைதான் பெரும்பாலான அரபு நாடுகளுக்கும். இப்போது உலக நாடுகள் மாற்று எரிசக்திக்கு தள்ளப்படுகிறது. மேலும் பெட்ரோல் தேவை கட்டுக்குள் இருக்கும்.


இந்த நிலையில் அவர்களுக்குரிய தீவிரவாதத்தால், தற்போது துவங்கியுள்ள — அரபுநாடுகளே ஒருவருக்கு ஒருவர் தாங்கிக்கொள்ளும் நிலை வரும். நிர்பந்தம் காரணமான சௌதி அராபியா பாக்கிஸ்தானை ஆதரிக்க வேண்டிய நிலை வரும். இதனால் இந்த இரண்டு நாடுகளுமே வன்முறை, உலகநாடுகளின் மதிப்பை இழக்கும் நிலை உருவாகலாம்.

அமெரிக்க அதிபர் "கென்னடி" கம்யூனிஸ்ட் நாடான சைனா வளர விரும்பாமல் இந்தியாவை அணுசக்தி நாடாக ஒத்துழைப்பு தருவதாக கூறினார். ஐநாவின் பாதுகாப்புக்கு குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு வழிவகை செய்வதாக கூறினார். "நேரு" நாங்கள் அமைதியை விரும்புபவர்கள். எங்களுக்கு இது வேண்டாம் என்றார் . ஆசியா பகுதியில்,ஜப்பானை இரண்டாம் உலக மஹா யுத்தத்திற்குப் பிறகு பெரிய வல்லரசாக ஆக்காமல் ஒரு பொருளாதார சக்தியாக மட்டும் வைக்க உலக நாடுகள் விரும்பின. (ஐரோப்பா பகுதியில் ஜெர்மனியையும் ஒரு பொருளாதார சக்தியாக மட்டும் வளர்த்தனர்)

இந்த நிலையில் வேறு வழி இல்லாமல் சைனா முக்கியத்துவம் பெற்றது. அந்த நேரம் பார்த்து, கம்யூனிச சித்திதாந்தம் கொண்ட" மா சே துங்" – மரணமும் நிகழ்ந்தது. சைனாவும் பொருளாதார தாராளமயம் ஏற்றுக்கொண்டது. நாம் ஓட்டப்பந்தயத்தில் ""முயல்போல் தூங்கிவிட்டு, ஆமையை முன்னுக்கு அனுப்பிவிட்டோம்" நல்லவேளை தற்போது மோடி அரசு வந்ததும், மேற்கத்திய நாடுகள், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பானுக்கு கொண்டாட்டம், இந்த பகுதிக்கு ஒரு நல்ல துணைவேண்டும் என்று கூட்டாக இந்தியாவை முன்னேற ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து நம் மக்கள் பயன் படுத்திக்கொண்டு, இதே அரசியல் சூழ்நிலை தொடர எண்ணவேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...