இந்தியாவின் முதன்மை கட்சியாக பாஜக. திகழ்கிறது

இந்தியாவின் முதன்மை கட்சியாக பாஜக. திகழ்ந்து வருவதாக கேரளாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
 
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பாஜக தேசிய நிர்வாக குழுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: சிறப்பான வரவேற்பு அளித்த பாஜக, தொண்டர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கேரளமக்கள் நாடு முழுவதும் மதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர்.
 
கேரளாவை நினைத்தாலே அது கடவுளின் நாடு என்பதுதான் நினைவுக்குவரும். கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து விழாமேடை வரையில் திரண்டிருந்த மக்களைக் கண்டு வியப்படைந்தேன். வளைகுடா நாடுகளில் கேரளமக்களின் பங்கு மதிக்கதக்கதாக உள்ளது. அங்கு பணி புரிபவர்களில் கேரள மக்களே அதிகம். அவர்களை அங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரளமக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும். ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் உயர்வில் மத்திய அரசு கவனம்செலுத்துகிறது. இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது. நான் தேர்தல் அரசியலில் நுழையும்முன் பா.ஜ.க,வில் பணியாற்றும் வாய்ப்பினை பெற்றேன். கட்சி தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் ஒரு போதும் வீணாகி விடாது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...